Posts

வைணவம்

Image
 மத அடையாளங்களில் அதிக நாட்டமில்லை.  திருமண் என்றும் திருநாமம் என்றும் சொல்லப்படும் மேல் நோக்கிய முக்கோடுகள்!  வைணவத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுவது!   பெருமாளின் பாதம் என்றும், வைணவ சூலம் என்றும் சொல்லப்படுகிறது. சங்கு சக்கரம் வெற்றியின் அடையாளமென்று சொல்கிறார்கள்.  நான் சிறுவனாய் இருந்த காலம் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு வழிபாட்டிலும். பொங்கல், தீபாவளி, புரட்டாசி விரதம் மற்ற விசேட நாட்களில் எங்கள் தந்தையார் எங்களுகெல்லாம் நாமம் போட்டு விடுவார்.  (தென்கலை மரபு கொண்டவர்கள்)  நான் கொஞ்சம் வளர்ந்ததும் அந்த பொறுப்பு எனக்கு வந்தது நான் அணிந்துகொண்டு, தம்பிகளுக்கும் திருநாமம் போட்டு விடுவேன்.   நாங்க வளரவளர பலரும் கேலி செய்வதால் அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விட்டோம்.  ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது ஆசிரியர் திரு வரதராசன் அவர்கள் எங்க குடும்ப வழக்கம் தெரிந்து கொண்டு ஏண்டா நாமம் போடுவது இல்லை என்று கேட்டு ஏதோ விளக்கம் சொன்னார் எனக்கு புரியல! ஒருநாள் நானாக நெற்றியில் பெரிய நாமமாக போட்டு பள்ளி சென்று எல்லோருடைய கேலிக்கும் ஆளானேன் பின்னர் ஆசிரியர் சொன்ன அறிவுரைபடி சிகப்பு கோடு ஒன்னு

ஆயத்தன் எனும் பக்தன்

Image
முன்னொரு காலத்தில் பொன்னியாற்றின் தென்கரையோரம் ஆநிரைகளை பாதுகாத்து, பராமரிக்கும் அருந்தொழில் செய்து வந்தான் ஆயத்தன். கண்ணன்மீது தீரா பக்தி கொண்டவன். எக்காலமும் எம்பெருமான் கண்ணனை மனதால் நினைத்து எண்ணத்தால் அர்ச்சித்து அந்த அதிர்வலைகளை உடலெல்லாம் நிறைத்து!  உணர்வால் உயர்ந்து வாழ்பவன் ஆயத்தன். ஆநிரைகளும் அவன் அதிர்வலைகளை உணர்ந்து அவன் எண்ணத்திற்கேற்ப நடந்து கொள்ளும். கொடிய விலங்குகள் கூட ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்லைக்குள் வந்தால் தன் குணம் மறந்து! சாந்தமாய் ஆநிரைகளுடன் பழகி செல்லும். ஆயத்தன் ஒருபோதும் மறந்து கூட கண்ணன் நாமத்தை தன்வாயால் சத்தமாய் உச்சரித்தது இல்லை! இது கண்ணனுக்கே பெருவியப்பாய் இருந்தது. தன்மீது பக்தி கொண்டோர் ஆடலும், பாடலுமாய் ஆனந்தத்தில் குதிப்பார்கள் ஆனால் இவனோ அமைதியே உருவாக அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை செய்யும் மாற்றத்தை கூட உணராது இருக்கிறானே!  எப்படி என்று சோதித்தறிய புறப்பட்டார் பூலோகம். கண்ணன் புறப்படும் காரணமுணர்ந்த ராதையுமிணைந்து கொள்ள, முதிர்ந்த தம்பதியராய்! பொன்னியாற்றகரையில் ஒருவர்கரமொருவர் பற்றி மெல்ல நடந்தார்கள் ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்ல

சீவன் முக்தி

Image
ஜீவசமாதி அடைந்த்தார்  மதுரை தொடர் வண்டி நிலையத்தில்  நீண்டகாலம் இருந்தார் ஐயா. மே மாதம் மதியம் 3 மணியளவில் மகாசமாதி அடைந்தார் என்ற செய்தி எம்மை எட்டியது. எமை வாழை வைத்த மகான்கள் வழிகாட்டி செல்கிறார்கள். ஐயா அவர்கள் எனநமக்கு வழிகாட்டியாய் இருப்பார்

புத்தரின் இறுதி உபதேசம்.

"அப்ப தீபோ பவ" "உனக்கு நீயே ஒளியாவாய்" புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். தன் கண்களைத் திறந்து புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள் . நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் கவனித்து கேட்க வில்லையா , எதற்கு இந்த அழுகை என்றார் . தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள் . எங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ ? என்றார் .  அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் இன்னமும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை .  என் உபதேசங்களை மட்டும் கேட்டுக் கொண்டிராமல் உங்களுக்கு நீங்களே ஒளியாக இருந்திருந்தீர்களேயானால் உங்களுடைய  ஆன்மாவை உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது என்றார் .. மஞ்சுஶ்ரீ என்ற மற்றொரு சீடரைப் பாருங்கள் . அவர் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள்  என்றார் . மஞ்சுஶ்ரீ கூறினார் ..  என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் உதவினார் . நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும் ? புத்தர் இங்கேதான் இருக்கப

இந்து மதம்

 இந்து மதம் என்ற ஒன்று இல்லை இந்திய அரசு கெஜட் அப்படி தான் சொல்கிறது 14~4~1921 அன்று தான் ஆங்கிலேய அரசு இந்த மதத்தை உருவாக்கி கெஜட்ல் ஏற்றி இருக்கிறது மேற்கொண்டு தகவல் ஏதேனும் தேவை என்றால் நீங்கள் நெட்டில் தேடி பாருங்கள்  பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை ஏற்று கொள்கிறார்கள் காஞ்சி பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர் இந்து மதம் என்று ஒரு மதம் கிடையாது அது வெள்ளைக்காரன் உருவாக்கியது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் அவர் சொன்னால் ஏற்று கொள்வீர்கள் தானே எனது புரிதல் மதம் என்பது மனிதனை நெறிபடுத்த உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் அரசியல் மற்றும் வியாபாரமாகி போனது. நமது தேசத்திலும் பல மதங்கள் இருந்ததாகவும் அவற்றை ஆதிசங்கரர் 6 மதங்களாக சுருக்கினார் என்பதும் வரலாறு. உலகில் சுமார் 4200 மதங்கள் உள்ளதாம் கூகிள் ஆண்டவர் சொல்கிறார். நான் ஒரு மொழியியல் ஆய்வாளரின் பேச்சை கேட்டேன் அவர் கிந்தி மொழி என்பது சுதந்திர போராட்டத்தின் போது உருவான கலப்பு மொழி என்கிறார் தென்னிந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே 80 சத ஆதி மொழியின் ஆதிக்கம் உள்ளது இருந்தும் உருது சமக்கிருத கலப்பு உ

osho

Image
ஞானி என்பவன் இறைவனுக்குள் நுழைந்தவன். வாழ்க்கையின் மர்மத்தை ஊடுறுவியவன். மெய்மையை எதிர்கொண்டவனாவான். ஒரு ஞானி அறிவுடையவனாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது ஒரு பொருட்டல்ல. ஞானத்திற்கும் அறிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.                -ஓஷோ.

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்

1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க ளுடன் பேசி, அவர்களுக்கு நீங்கள் சொல்ல‍விரும்பும் கருத்தைப் புரிய வைக்க‍ முடியும். 2. நீங்கள் பேசும்போது உங்களுக்கு எதிரே இருப்ப‍வர்கள், முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்க ள். அப்போது தான் உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நீங்கள் பேச விரும்பியதை பேசமுடியும், அ தைப்போல அவர்கள்பேசி நீங்கள் கேட்கும்போது அவர்களை சிறந் த அறிவாளிகளாக எண் ணிக்கொள்ளுங்கள் ஏனெ ன்றால், பிறர் பேசுவதில் உ ள்ள‍ நல்ல‍ கருத்துக்களும் உங்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க‍ க் கூடும் ஆகையால் அவர் கள் பேசுவதை அலட்சியம் செய்யாமல், அறிவுப்பூர்மான அவர்க ளது பேச்சைக் கேளுங்கள் 3. எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்களுக்குத் தேவையான விவ ரங்களைக் கேட்கச்செல்லும்போது அ ங்கு நீங்கள் கேட்கவிரும்பியதை கேட் காமல் தயங்கி தயங்கி நிற்கக் கூடாது. 4. எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், அங்கே உங்களது

பணபுழக்கம் அதிகரிக்க

பணவசியம் ஏற்பட, பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பட்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம்.ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது.

சோடேச கலை

 .சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்:நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்) மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் எ
http://www.youtube.com/watch?v=GNLxLw9Xgvo http://www.youtube.com/watch?v=ZLZMbHhWK6g http://www.youtube.com/user/MrPiththan Appa videos here.

மூட்டைசாமியின் அறிய காணொளி

மூட்டைசாமி மூட்டை மீது துயில் கொள்ளும் அறிய காணொளி 

சித்தர்கள்

Image
ஐயா மூட்டைசாமி மூட்டைசாமி சரணம்  ஐயா  ஐயா வைகுண்டரின் மறு அவதாரம் என்று சொல்கிறார்கள் ஐயாவை நான் சந்தித்தல்லை.  திருவண்ணாமலையில் மேலே பல ஆண்டுகள் தவம் செய்து கால்கள் அப்படியே ஒட்டி போனது என்றும் இளையராஜா அவர்கள் ஐயாவை சந்தித்து கீழவரவேண்டும் என்று கேட்டுகொண்டு ஐயாவை மருத்துவமனையில் சேர்த்து ஆபரேசன் மூலம் கால்கள் பிரித்து எடுக்கப்பட்டது என்று சொன்னார்கள்.  ஐயா தற்போது நெல்லை ஐஞ்சுகிராமம் பால்குளம் என்ற ஊரில் இருப்பதாக சொல்கிறார்கள்.  மேல் விவரங்கள் தெரிந்தோர் சொல்லுங்க நண்பர்களே.