புத்தரின் இறுதி உபதேசம்.
"அப்ப தீபோ பவ" "உனக்கு நீயே ஒளியாவாய்" புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். தன் கண்களைத் திறந்து புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள் . நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் கவனித்து கேட்க வில்லையா , எதற்கு இந்த அழுகை என்றார் . தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள் . எங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ ? என்றார் . அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் இன்னமும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை . என் உபதேசங்களை மட்டும் கேட்டுக் கொண்டிராமல் உங்களுக்கு நீங்களே ஒளியாக இருந்திருந்தீர்களேயானால் உங்களுடைய ஆன்மாவை உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது என்றார் .. மஞ்சுஶ்ரீ என்ற மற்றொரு சீடரைப் பாருங்கள் . அவர் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள் என்றார் . மஞ்சுஶ்ரீ கூறினார் .. என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் உதவினார் . நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும் ? புத்தர் இங்கேதான் இருக்கப