மதுரை சுவாமிகள் மதுரை சாமிகளை 2009 ஆம் ஆண்டு மதுரை இரயில் நிலையத்தில் பார்த்து ஆசி பெற்றேன். முதல்நாள் இரவு நானும் நண்பரும் சென்றோம் ஐயா அமைதியாக அமர்ந்திருந்தார் நாங்கள் அருகில் அமர்ந்தோம் அப்போது ஒருவர் ஏதோ ஒரு உணவை கொண்டு வந்து வைத்து விட்டு ஐயாவிடம் விழுந்து வணங்கினார் ஐயா அப்படியே அமர்ந்திருந்தார் அவர் சென்றபின் நான் ரயில்வே கேண்டீனில் சென்று இட்லி வாங்கி வந்தேன் ஐயாவிடம் வைத்தேன் எடுத்து சாப்பிட்டு கையை தண்ணீர் வேண்டும்போல் காண்பித்தார் நான் தண்ணீர் பாட்டிலும் காப்பியும் வாங்கி வந்தேன் அதை பெற்று கொண்டார் பிறகு நாங்க அங்கிருந்து கிழம்பி மூட்டைசாமி ஒரு திருமண மண்டபத்தில் இருந்தார் அன்று அந்த இடம் சென்றோம். மீண்டும் காலை மூட்டை சாமி பழனி சென்றதும் நாங்க ஐயாவை பார்க்க வந்தோம் அருகில் நான் அமர்ந்தேன் என்னை ஓர் அழகிய புன்னகையுடன் பார்த்துகொண்டே இருந்தார் எனக்கு எதுவும் புரியவில்லை அருகில் இருந்த ஒரு பாட்டிம்மா சொன்னாங்க இனி உனக்கு நல்ல காலம் தம்பி சாமி இதுபோல் யாரையும் பாக்க மாட்டார் என்றார். அதன் பிறகு நான் ஐயாவை பார்கவில்லை இப்போது எந்த இடத்